31 Mar 2016

இது போதவே போதாது

......மூக நீதிக்காகத்தான்  இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் கொண்டுவந்தார் ...
( ஆம் உண்மைதான் ; ஆனால் நடப்பது ! )
       ......இட ஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்பதை உறுதியாகச் சொல்லுகிறேன். இட ஒதுக்கீடு என்பது தலித் உள்ளிட்ட சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களின் உரிமை . அதை யாரும் பறிக்க முடியாது.
    .....நான் ஏற்கனவே கூறியதுபோல் அம்பேத்கரே மீண்டும் தோன்றினாலும் இட ஒதுக்கீட்டை பறிக்க முடியாது “ என்று அம்பேத்கர் நினைவிட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார் - தி இந்து , 22-3-2016 .
       பிரதமர் மோடியின் பேச்சில் கூர்ந்து நோக்கவேண்டியவைகள் (1) சமூக நீதிக்காகத்தான் ; (2) தலித் உள்ளிட்ட சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களின் உரிமை ; அதை யாரும் பறிக்க முடியாது .
       அதைப் பறிக்க யார் வருவது ? .
       அதை என்றும் காப்பாளனாகத்  தன்னை நனவிலியாக முன்னிறுத்துவதேன் ?
       அம்பேத்கர் மீண்டும் தோன்றி வந்தாலும் முடியாது என்ற கூற்றின் அடியில்  ஓடும் எண்ணம் என்ன ? இடஒதுக்கீட்டுக் காப்பாளன் “ நமோ “ ; அதாவது , குறிப்பாக கி.பி 2000 –ற்கான தலித்தின் நவீன காப்பாளர் “ நமோ “ என்பதாகிறது . நமோ இந்த நூற்றாண்டின் இட ஒதுக்கீட்டின் அடையாளமாகிறது. சற்று யோசித்தால் , நமோவின் இயங்கும் திசை அச்சமாக இருக்கிறது . இதை அறிய ஒரு அடிப்படையான கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம் .
       நேருவின் இடத்தில் படேலை வைக்க எடுத்த அரசியல் நடவடிக்கையை நினைவு கூறும் நேரமிது ; இப்போது ‘ அம்பேத்கரே வந்தாலும் இட ஒதுக்கீட்டைத் தடுக்க முடியாது ‘ . ‘ நானிருக்கப் பயமேன் ‘ என நனவிலியாகக் கூறுகிறார் .
       இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது என்று உறுதியாகச் சொல்கிறது . இது மோடியின் தன்னிலையாகிறது . எது ? . இட ஒதுக்கீடு என்பது நிரந்தரம் / மாறாதது / அம்பேத்கர் திரும்பினாலும் மாற்ற முடியாது என்பது நனவிலியாகும் ஆசையாகும் . ஏன் இப்போது இவ்வளவு அக்கறை ?
       அம்பேத்கர் திரும்பினாலும் முடியாது என்பது கற்பனை ஒழுங்கு ( imaginary order ) .  சாத்தியமற்ற ஒன்றை ஏன் முன்னிறுத்த வேண்டும் ?
       ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது . காங்கிரசால் புறக்கணிக்கப்பட்ட படேல் , போஸ் ; இப்போது அம்பேத்கர் வருகிறார் .
       சமகால அரசியலில் , கலாச்சாரம் , மொழி சிம்பாலிக்காக ( symbolic ) ; மோடியின் நனவிலி ஆசை ( unconscious desire ) மேற்கூறிய சிம்பாலிக் அதிகாரத்தை ; படேல் , போஸ், அம்பேத்கர் போன்றோரின் வழித்தோன்றலாக ,  பாதுகாவலராக ; வரலாற்று நீடிப்பாக , தன்னை அடையாளப் படுத்துகிறார் மக்களிடம் .
                அவரின் நனவிலி ஆசையை அவரின் மனசுக்குள் சென்று அறிய வேண்டியதில்லை . அவரின் சொல்லாடல்களும் அதன் விளைவுகளும் (  effects ) ,  அதனை நடைமுறைப்படுத்தும் நினைவு விழாக்களும் , விளம்பரமும் ; தன்னை அவைகளுடன் நேரடியாக , மறைமுகமாக அடையாளப் படுத்திக்கொள்வதுதான் ( இன்றைய காவலனாக) அவரின் நனவிலி ஆசையின் உந்தலுக்கான சாட்சி . 
        இட ஒதுக்கீடு தனித்துவமானது ( entity )  அல்ல . அது சாதிய சமூகத்தின் பகுதி மட்டுமே . அதுவும் ஒரு இடைக்கால சரிசெய்தல் மட்டும்தான் .
       முழுமை என்பது சாதியம் . அந்தத் தீட்டை / Evil - ஐ  ஒழிக்க , குடியுரிமையை ( திருமணம் பண்ணும் உரிமையை ) நிலைநாட்ட , ஒரு சமூகப் புரட்சி தேவை / உண்மையான சமூக ஜனநாயகப் புரட்சி தேவை .
       அதை விடுத்து இந்தப் பாராளுமன்றத்தின் ஜனாதிபதி , முதல் மந்திரி , இட ஒதுக்கீடு , போன்றவற்றிற்கு உழைப்பது , பேசுவது , அதுவும் காத்திரமாக எழுதுவதும் இந்தப் பாராளுமன்ற ஜனநாயகம் காக்கத்தான் பயன்படும் . நடைபெறும் மாற்றமெல்லாம் பகுதியிலேதான் ; முழுமையில் அல்ல .   முழுமை இன்னும் வெகு தூரத்தில்.
       பாராளுமன்றமுறை நிரந்தரமாகக் கோலோச்ச சாதிய சமூகம் வேண்டும் .
      மனுவால் கட்டப்பட்ட சாதியம் அந்தந்த சாதிக்குரிய பாராளுமன்றவாதத்தால் நிரந்தரமான ஒதுக்கிடத்தில் ( Bay ) நங்கூரமிட்டு , சாதியம் நிற்கவைக்கப்பட்டுள்ளது .   அவ்வளவுதான் .

க.செ


No comments:

Post a Comment